×

நூல் விலை உயர்வு விசைத்தறி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


திருச்செங்கோடு, பிப்.12: திருச்செங்கோட்டில், வரலாறு காணாத நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் வரலாறு காணாத நூல் விலை உயர்வை கண்டித்து, விசைத்தறி தொழிலையும்,  தொழிலாளர்களையும் பாதுகாக்கவேண்டும், பொது சுத்திகரிப்பு நிலையம் உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நேற்று ராயப்பன் சங்க துணை தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கண்டனம் தெரிவித்து பேசினார். தமிநாடு விவசாயிகள் சங்க மாவட்ட  தலைவர் ஆதிநாராயணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பூபதி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் பேசினர். சங்க மாவட்ட உதவி செயலாளர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

Tags :
× RELATED திருச்செங்கோட்டில் கோடை மழை